கரூர்: 'கூட்டுறவு காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வின், உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன' என, கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் காந்திநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் காலிப் பணியிடங்களுக்கு, கடந்த, 6ல் அரசு கலைக்கல்லூரியில் எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வின் உத்தேச விடைகள் வெளியிடப்படுள்ளன. தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் விடைகளை ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு இருந்தால் வரும், 18க்குள் தேர்வு நுழைவுச்சீட்டு, பதிவு எண், வினா எண், வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கான விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாகக் குறிப்பிட்டு, மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE