கரூர்: கரூர்-வெங்கமேடு இடையே உள்ள, ரயில்வே பாலத்தின் மேல் பகுதிகள் சேதம் அடைந்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
கரூர்-சேலம் பழைய சாலை, ஈரோடு ரயில்வே வழித் தடத்தில், வெங்கமேடு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு, ரயில்வே பாலம் கட்டப்பட்டது. அதன் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு, வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, வெங்கமேடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கரூர் நகருக்கு செல்ல ரயில்வே பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே பாலத்தின் மேல் பகுதிகளில் பல இடங்களில், சிமென்ட் தளம் சேதமடைந்துள்ளது. குறிப்பாக, சில இடங்களில் ஜல்லிக்கற்கள் வெளியே தெரிகின்றன. இதனால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் தவறி விழுகின்றனர். எனவே, வெங்கமேடு ரயில்வே பாலத்தில், சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE