புதுடில்லி: வேளாண் சட்டத்திற்கு எதிராக 18 வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடக்கும் நிலையில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷாவுடன், விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் அமைச்சர் சோம்பிரகாஷ் ஆலோசனை நடத்தினர்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி - ஹரியானா எல்லையில் பஞ்சாப் மாநில விவசாயிகள் நடத்தும் போராட்டம் 18 வது நாளாக நீடிக்கிறது. அவர்களுடன் 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் அதில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. டில்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையை மறிக்க போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் என மத்திய அரசு கூறியும் அதனை அவர்கள் ஏற்கவில்லை. விவசாயிகள் போராட்டத்தை நிறுத்திவிட்டு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்க ராஜஸ்தான், ஹரியானாவிலிருந்து விவசாயிகள் வருவதால், அம்மாநில எல்லைகளில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தடுப்புகளை அடைத்துள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, விவசாயத்துறை அமைச்சர் தோமர் மற்றும் சோம்பிரகாஷ் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE