சென்னை: தமிழகம் முழுவதும் 'அம்மா மினி கிளினிக்' திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று (டிச.,14) துவக்கி வைத்தார்.
மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, முதல் கட்டமாக 630 ‛அம்மா மினி கிளினிக்'குகள் துவக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் முதல்கட்டமாக 47 இடங்களில் மினி கிளினிக் துவங்கப்படுகிறது.

இந்த ‛அம்மா மினி கிளினிக்'கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கும். சளி, காய்ச்சல், தலைவலி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு மாதாந்திர மருந்துகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் 12 வரையும், மாலையில் 4 மணி முதல் 8 மணி வரையும் கிளினிக்குகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE