புதுடில்லி: டில்லியில் போராடி வரும் விவசாயிகள் இன்று (டிச.,14) ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டில்லி எல்லையில் 19வது நாளாக போராடி வருகின்றனர். விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு மேற்கொண்ட பலகட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால், விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் உள்ள விவசாயிகள் இன்று (டிச.,14) ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை 8 மணிக்கு துவங்கிய போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில், பல்வேறு விவசாயிகள் சங்க தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். மேலும் ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் விவசாயிகளுடன் கைகோர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE