புதுடில்லி : ''நம் வடக்கு எல்லைப் பகுதியில், அத்துமீறல்கள் மற்றும் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள, நம் படையினர் தயாராக உள்ளனர்,'' என, முப்படைகளின் தலைமை தளபதி, ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீரில், இந்தியா - பாக்., எல்லை பகுதியில், பாக்., படையினர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.எல்லைப் பகுதியான, பூஞ்ச் மாவட்டத்தில், நம் படையினர் மீது, பாக்., படையினர் சமீபத்தில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு, நம் படையினர், தகுந்த பதிலடி அளித்தனர்.பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில், பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி, ஜெனரல் பிபின் ராவத், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:கொரோனா அச்சுறுத்தல் காலத்தில், கிழக்கு லடாக் பகுதியில் உள்ள உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில், சீனப் படையினர் அத்துமீறலில் ஈடுபட்டதை அடுத்து, நம் முப்படைகளும், வடக்கு எல்லையில், அதிதீவிர கண்காணிப்பில்
ஈடுபட்டுள்ளன.
நம் படைகளின் போர்க்குணமிக்க தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க, இப்போது நேரம் வந்துவிட்டது. வடக்கு எல்லைப் பகுதியில், அத்துமீறல்கள் மற்றும் சவா லான சூழ்நிலைகளை எதிர்கொள்ள, நம் படையினர் தயாராக உள்ளனர்.போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுபவர்கள் தான், தங்கள் நிலை குறித்து கவலை கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பிபின் ராவத்தின் இந்த கருத்து, பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாக கருதப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE