சூலுார்:சூலுார் நகர பா.ஜ., விவசாய அணி மற்றும் ஓ.பி.சி., அணிக்கு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மற்றும் கோட்டப் பொறுப்பாளர்கள் பரிந்துரையின் பேரில், சூலுார் நகர விவசாய அணி தலைவராக வேணுகோபால், பொதுச்செயலாளராக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓ.பி.சி., அணி தலைவராக ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளராக பாபு, பொருளாளராக பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளுக்கு, நகர பொதுச்செயலாளர் வெள்ளியங்கிரி துணைத்தலைவர் செந்தில், பொருளாளர் சசிதரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE