பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே உள்ள ஜி.என்.மில்ஸ் பிரிவில், பழங்குடி மக்களின் வாழ்வாதார கூட்டமைப்பு சார்பில், பழங்குடியினரின் விளைபொருட்கள் கண்காட்சி நடந்தது.அமைப்பின் முதலாவது பொதுக்குழுக் கூட்டத்துக்கு, செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் வீரப்பன் வரவேற்றார். எச்.இ.கே.எஸ்., அமைப்பின் இயக்குனர் டொனாட்டா மேரி பங்கேற்று பேசினார்.முன்னாள் தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீதரன், கூட்டமைப்பின் தலைவர் சரவணன், துணைத் தலைவர் இந்திரா, கோவை விவசாயப் பல்கலை பேராசிரியர் பாலசுப்ரமணியம், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் அரிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பழங்குடியினர் உருவாக்கிய கலைப்பொருட்கள், விளைபொருட்கள் கண்காட்சியை, பொதுமக்கள் பார்வையிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE