சூலுார்:சூலுார் சட்டசபை தொகுதியில், 12 ஆயிரத்து, 636 பேர் புதிய வாக்காளர்களாக சேர விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, முதல் கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த மாதம், 16ம் தேதி மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், சூலுார் சட்டசபை தொகுதியில், ஒரு லட்சத்து, 49 ஆயிரத்து, 126 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து, 54 ஆயிரத்து, 873 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் என, மொத்தம், 3 லட்சத்து, 4,026 வாக்காளர்கள் இருந்தனர்.கடந்த நவ., 21 மற்றும், 22ம் தேதி நடந்த முதற்கட்ட வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில், 7,344 பேர் புதிய வாக்காளராக பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருந்தனர். அதேபோல், இம்மாதம், 12, 13ம் தேதிகளில் நடந்த இரண்டாம் கட்ட முகாமில், 5,292 பேர் சேர விண்ணப்பித்துள்ளனர். தொகுதியில், மொத்தம், 12 ஆயிரத்து, 636 பேர் புதிய வாக்காளர்களாக சேர விண்ணப்பித்துள்ளனர்.புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வினர் தீவிரம் காட்டினர். நான்கு நாட்கள் நடந்த முகாமில், இரு கட்சிகளின் நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று வேலை செய்தனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தருவது, புதிய வாக்காளர்களை வீடு தேடி சென்று அழைத்து வந்து விண்ணப்பம் கொடுக்க வைப்பது என, பல பணிகளை செய்தனர். இதனால், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிய வாக்காளர்களாக விண்ணப்பித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE