மேட்டுப்பாளையம்:விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை, விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலகங்களில் கோரிக்கை மனு அளித்தனர்.யானை, காட்டுப்பன்றி, மயில், மான், குரங்கு ஆகியவை, விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை, வனத்துறையினர் தடுக்க வேண்டும்.வன விலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு, உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை முன்வைத்து, வெள்ளியங்காடு, ஓடந்துறை, சிக்கதாசம்பாளையம், சிறுமுகை ஆகிய பகுதிகளில் உள்ள, கிராம நிர்வாக அலுவலகங்களில், நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஏராளமான விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறுகையில், ''வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்துக்கு, அரசு இழப்பீடு தொகை உடனடியாக வழங்க வேண்டும். வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE