மேட்டுப்பாளையம்:ஓடந்துறை ஊராட்சியின் குப்பை கொட்ட இடம் வழங்கக்கோரி, ஊராட்சி தலைவர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.மேட்டுப்பாளையம் நகராட்சி அருகே உள்ள ஓடந்துறை ஊராட்சி, சிறந்த ஊராட்சி என மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் ஊராட்சியின் தலைவர் தங்கவேல், ஓடந்துறை கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்த கோரிக்கை மனு:ஓடந்துறை ஊராட்சியில் ஏழு சிறிய கிராமங்கள் உள்ளன. இதில் சில கிராமங்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லை அருகே அமைந்துள்ளதால், அதிகமான அளவில் குடியிருப்புகள் உள்ளன. அதனால் இக்கிராமங்களில் உள்ள வீடுகள் மற்றும் ஓட்டல்களில், துாய்மை பணியாளர்கள் வாயிலாக சேகரிக்கப்படும் குப்பை, தரம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், குப்பையை குவித்து வைக்கவும், அதிலிருந்து உரங்களை தயாரிக்கவும், ஊராட்சியில் போதிய குப்பை கிடங்கு இல்லை.ஆங்காங்கே கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பை, குடியிருப்பு பகுதியில் தீ வைத்து எரிக்கின்றனர். ஊராட்சியில் உள்ள, வருவாய் துறைக்கு சொந்தமான காலியிடத்தை, குப்பை கொட்ட வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE