பெ.நா.பாளையம்:வீரபாண்டி பிரிவில், தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது, தமிழக அரசு பொய் வழக்கு போட்டுள்ளதாகவும், அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டியும், பெரியநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் அறிவரசு தலைமையில், தி.மு.க.,வினர் வீரபாண்டி பிரிவில் ஆர்ப்பாட்டம்,சாலை மறியலில் ஈடுபட்டனர்.பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்ட, 150க்கும் மேற்பட்டோரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE