உடுமலை:பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், நான்காம் சுற்று நிறைவு பெற்று பிரதான கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, ஆக., 27ல், தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த மண்டலத்தில், திருப்பூர், கோவை மாவட்டத்துக்குட்பட்ட, 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.ஐந்து சுற்றுகளாக இப்பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசாணை பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், நான்காம் சுற்று நிறைவு பெற்று, கிளை கால்வாய்களில், நேற்று முன்தினமும், பிரதான கால்வாயில், படிப்படியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு, நேற்று தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த சுற்றில், பாசனப்பகுதியில், பரவலாக மழை பெய்தது. அரசாணை அடிப்படையில், இறுதிச்சுற்றுக்கு குறிப்பிட்ட இடைவெளியில், திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE