கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சி அலுவலக கட்டடம் கடந்த, 2004ம் ஆண்டு திறக்கப்பட்டது.அலுவலகம் சிறியதாக இருப்பதால், அங்கு ஊராட்சி கூட்டம் நடத்துவதற்கான இடவசதியில்லை. கட்டடம் பழுதடைந்துள்ளதால், மழை காலங்களில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. அலுவலக பதிவேடுகள் மழை நீரில் சேதமடையும் வாய்ப்புள்ளது.மேலும், கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழும் சூழ்நிலை உள்ளது. கட்டடத்தின் முன்பக்கம், நான்கு லட்சம் ரூபாய் செலவில், பலநோக்கு மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.இந்த கட்டடத்துக்கு ஊராட்சி அலுவலகத்தை மாற்றம் செய்து, பழைய கட்டடத்தை இடித்து, புதிய ஊராட்சி அலுவலகம் கட்ட வேண்டும்.இதே வளாகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டடமும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த கட்டடத்தையும் இடித்து, புதிதாக ஊராட்சி, கிராம நிர்வாக அலுவலகம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE