பொள்ளாச்சி:'ஆச்சிப்பட்டி ஊராட்சி கழிவுநீர் செல்ல வழி இல்லாததால், சுகாதாரம் பாதிக்கிறது,' என, சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதனிடம், ஆச்சிப்பட்டி மக்கள் கொடுத்த மனு:பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ஆச்சிப்பட்டி, 1, 2வது வார்டுகளின் கழிவுநீர், பொள்ளாச்சி - கோவை ரோடு அருகே, ஊராட்சியால் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக கழிவுநீர் சாக்கடை சென்று கொண்டுள்ளது. கழிவுநீர் கான்கிரீட் கால்வாயை, பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காக இடித்ததால், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்கிறது.நெடுஞ்சாலைத்துறையினர், கழிவுநீர் வெளியேற மாற்று ஏற்பாடுகள் செய்யாமல், கழிவுநீர் பாதையை மண் கொட்டி தடுத்துள்ளனர். இதனால், கழிவுநீர் வீடுகளில் தேங்கி நிற்கிறது. இது குறித்து துணை சாபாநாயகர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தலைவர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.இதனால், கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சி பா.ம.க.,வினர், கிராம நிர்வாக அலுவலகங்களில் கொடுத்த மனுவில் 'கல்வி, வேலைாய்ப்பில் பின்தங்கியுள்ள வன்னியர்களுக்கு, 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்,' என தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE