மானாமதுரை : மானாமதுரையில் வைகை ஆற்றில் செல்லும் ரயில்வே பாலத்திற்கு அடியில் உள்ள துாண்களில் ஆபத்தை உணராமல் மதுப்பிரியர்கள் அமர்ந்து மது குடிப்பதால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
மானாமதுரை நகரின் குறுக்கே வைகை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே 2 வாகனபாலமும்,1 ரயில்வே பாலமும் செல்கிறது.வைகை ஆற்றை ஒட்டியுள்ள மதுக்கடையில் மது வாங்கி வரும் மதுப்பிரியர்கள் அருகே உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியிலுள்ள துாண்களில் உட்கார்ந்து மது குடிக்கின்றனர்.தற்போது வைகையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ள நிலையில் ஆபத்தை உணராமல்அங்கு சென்று மது குடிப்பதால் தண்ணீரில் அடித்து செல்லும் அபாயம் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE