பேரூர்:பச்சாபாளையம் கிராமம் அருகே, யானைகள் நடமாட்டம் உள்ளதால், அதிகாலை 'வாக்கிங்' செல்வோர் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடி வார கிராமங்களில், யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதிகாலையில் இயற்கை உபாதைக்காக செல்வோர், யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகி வருகின்றனர்.இந்நிலையில், பேரூர் அடுத்த பச்சாபாளையம் ரங்கா நகர் பகுதியில், இரவு மற்றும் அதிகாலை நேரத்தில், யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இப்பகுதிக்கு, பச்சாப் பாளையம் மணிகண்டன் நகர், சரவணா நகர், தீத்திபாளையம், காளம்பாளையம் பகுதி மக்கள், அதிகாலை, 5:00 மணி முதல், நடை பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.எனவே, அதிகாலை நடைபயிற்சியில் ஈடுபடுவோர் எச்சரிக்கையுடன் இருக்க, வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. இப்பகுதிகளில், இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் நடமாட்டமும் அதிகம் காணப்படுகிறது. எனவே, போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE