திருப்பூர்:சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரர் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், தொலைபேசி வாயிலாக, மக்களிடம் குறைகேட்கும் முகாம் நேற்று நடந்தது. பொதுமக்கள் நேரில் வந்தும், மனுக்களை பெட்டியில் செலுத்தினர்.கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடந்த முகாமில், 52 பேர் மட்டும், தொலைபேசி வாயிலாக, தங்களது குறையை தெரிவித்தனர்.முன்னதாக, சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற, திருப்பூரை சேர்ந்த பிரசாந்த், கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடுமலை, குறல்குட்டை பகுதியில், பி.ஏ.பி., வாய்க்காலில் மூழ்கி இறந்த பெண்ணுக்கு, முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதற்கான காசோலை, அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE