திருப்பூர்:வேலுாரில் இருந்து வந்துள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்று துவங்குகிறது.எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், வேலுார் மாவட்டத்தில் இருந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பல்லடம் வந்துள்ளன. தாலுகா அலுவலக 'ஸ்ட்ராங் ரூம்' ல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.'பெல்' நிறுவன இன்ஜி., குழுவினர், திருப்பூர் வந்துள்ளனர். தாலுகா அலுவலகத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட சரிபார்ப்பு பணி இன்று துவங்குகிறது.ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் இயங்கு தன்மையை உறுதி செய்யும் வகையில், முதல்கட்ட சரிபார்ப்பு செய்து, பழைய ஓட்டுக்களை அழித்து, இருப்பு வைக்கப்படுமென, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE