ஊட்டி:ஊட்டி, கலெக்டர் அலுவலகம் அருகே, காத்திருப்பு போராட்டம் அறிவிப்பால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக, இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., கட்சியினர், ஊட்டி கலெக்டர் அலுவலம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்கு, போலீஸ் அனுமதியில்லை. நேற்று காலை, போராட்டத்துக்காக, நுாற்றுக்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்ததால் டவுன் டி.எஸ்.பி., தலைமையில், போலீசார் வழிமறித்து நின்று, போராட்டம் நடத்த அனுமதிக்கவில்லை. இதனால் இ.கம்யூ., மாவட்ட செயலாளர் போஜராஜ்; மா.கம்யூ தாலுகா செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் மட்டும் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE