கோத்தகிரி:கோத்தகிரியில் பள்ளி மாணவன், துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோத்தகிரி அரவேனு அளக்கரை சாலை, காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் மகன் சஞ்சித்,17. கோத்தகிரியில், ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரின் தந்தை வேறு திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். சஞ்சித்தும், தாயார் லீலாவதியும் தனியாக வசித்து வந்தனர். இதனால், மன உளைச்சலில் இருந்த சஞ்சித், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். தகவல் அறிந்த போலீசார், உடலை மீட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.போலீசார், விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE