கோவை:கோவையில் ரவுடியை வெட்டிக் கொன்ற மூவர் போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தனர்.கோவை கணபதி கஸ்துாரிபாய் வீதியை சேர்ந்தவர் கரண்குமார், 23. இவர் மீது வழிப்பறி, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட எட்டு கிரிமினல் வழக்குகள் உள்ளன. கடந்த மாதம், ரத்தினபுரி போலீசார் கஞ்சா வழக்கில் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த, 15 நாட்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்தார்.கரணுக்கு அறிமுகமான கூலித்தொழிலாளர்கள் கணேஷ், 24, ரவிசங்கர், 22, சீனிவாசன், 23 ஆகிய மூவரும், கணபதி, கஸ்துாரிபாய் வீதி உள்ளிட்ட பகுதிகளில், அவருடன் சுற்றித்திரிந்தனர். மதுபோதையில் இருந்த கரண், அதில், ஒருவரை அழைத்து, தலைமுடி நீளமாக வளர்த்தது குறித்து கோபம் அடைந்தார். இதில், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.கரண் ஆத்திரமடைந்து, அவரை கத்தியால் குத்த முயன்றார். தொடர்ந்து, மூவரும் கரணை, கம்பியால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த கரண் உயிரிழந்தார்.மூவரும் சரவணம்பட்டி போலீசாரிடம் நேற்று சரணடைந்தனர். மூவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE