நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்ட எல்லை களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற அரசு பஸ்சில் திருச்சூர் சாலக்குடி ராஜீவ் 49, என்பவரது பையில் இருந்து 20 லட்சம் ரூபாய், 38 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
பாலாராமபுரம் செக்போஸ்ட் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கியது. ராஜீவிடம் விசாரித்தபோது குமரி மாவட்ட நகைக்கடைகளில் நகை விற்பனை செய்து திரும்பி செல்வதாக தெரிவித்தார். இருப்பினும் ஆவணங்கள் இல்லாததால் பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டு அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை நடைபெறுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE