ஸ்ரீபெரும்புதுார் : 'டிவி' நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ேஹம்நாத் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
சென்னையை சேர்ந்த 'டிவி' சீரியல் நடிகை சித்ரா 29. டிச. 9ல் பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் நட்சத்திர ஓட்டலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., திவ்யஸ்ரீ நேற்று விசாரணையை துவக்கினார். சித்ராவின் தாய் விஜயா, தந்தை காமராஜ், அண்ணன் சரவணன் அக்கா சரஸ்வதி ஆகியோரிடம் தனித்தனியே விசாரித்தார். மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ேஹம்நாத் குடும்பத்தினர் வரதட்னை கேட்டு கொடுமைப்படுத்தினரா என்ற கோணத்தில் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.
இன்று ஹேம்நாத்திடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சித்ராவை தற்கொலைக்கு துாண்டியதாக நேற்று இரவு ேஹம்நாத்தை போலீசார் கைது செய்து பென்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE