
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி அமைந்து உள்ளது. இங்குள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளின் கூரைகளில், சூரிய மின்சக்திக்கான பேனல்களை அமைக்க, மாநில அரசு முடிவு செய்தது. மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ், இதற்கான பணி மேற்கொள்ளப்படுகிறது. டில்லியில் தற்போது, 150 பள்ளிகளின் கூரைகளில், 21 'மெகா வாட்' மின்சாரம் உற்பத்தி செய்யும் பேனல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை பள்ளிகள் உபயோகிப்பதுடன், கூடுதல் மின்சாரம் விற்பனையாகிறது.

இதனால், பள்ளிகளின் மின் கட்டணத்தில் ஆண்டுதோறும், 8.8 கோடி ரூபாய் சேமிக்கப்படுவதுடன், கூடுதல் மின்சாரம் விற்பனை வாயிலாக, அரசு பள்ளிகள் ஆண்டுக்கு, 8.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE