நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு நரியன்ஓடை கரையில் உள்ள பாதாள காளி மற்றும் பிரத்தியங்காரதேவி கோவிலில் நேற்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது.
பூஜையை முன்னிட்டு நேற்று மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு, யாக வேள்வி துவங்கியது. மதியம் 1:30 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது.தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து யாக வேள்வியில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து பிரத்தியங்கராதேவிக்கு கலச அபிேஷகம் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது.பூஜைக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE