புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அடுத்த காயல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம் மகன் கபீர்,22; டிப்ளமோ பட்டதாரி. நேற்று இவர் இப்பகுதியிலுள்ள காந்தி என்பவரின் தோப்பில் நடந்து சென்றபோது, அங்கு அறுந்து தொங்கிக்கொண்டிருந்த உயர் மின்னழுத்த கம்பி தலையில் உரசி உள்ளது. அதில் துாக்கி எரியப்பட்ட கபீர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE