குறிஞ்சிப்பாடி; கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.குள்ளஞ்சாவடியை அடுத்த, டி.பாளையம், அருகே உள்ள திம்மராவுத்தன்குப்பத்தை சேர்ந்தவர் பெருமாள்,55; அவரது மனைவி, சித்ரா,51; இவர்களது மகன்கள் பார்த்திபன்,16; பாலச்சந்தர்,13;கணவரை இழந்த சித்ரா, தனது இரு மகன்களை வளர்த்து வந்தார். மகன்கள் இருவரும் நேற்று மதியம் வீட்டில் உள்ள தரை கிணறு அருகே குளித்தனர்.அப்போது, சோப் எடுப்பதற்காக பார்த்திபன் வீட்டின் உள்ளே சென்றபோது, பாலச்சந்தர் தவறி, 40 அடி ஆழ கிணற்றில் விழுந்தார். தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்தினர், சம்பவ பகுதிக்கு சென்று ஒன்றரை மணி நேரம் போராடி சிறுவன் உடலை மீட்டனர்.குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE