திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மணலுார்பேட்டை அடுத்த வடக்குத்தாங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கப்படுகிறது. இதன் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி வடக்குத்தாங்கள், புதுகொளப்பட்டு, தேவனுார், சித்தப்பட்டினம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் கடந்த 10ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பணியை தடுத்து நிறுத்தினர்.வருவாய்த்துறை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பணிகள் நடைபெற்றது.இந்நிலையில் நேற்று முன்தினம், உயர்மின் கோபுரம் அமைப்பதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி, தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மணலுார்பேட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் கரும்பு விவசாயிகள் சங்க துணை பொதுச் செயலாளர் வேல்மாறன் தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE