அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.மேல்மலையனுார் பஸ் நிறுத்தம் அருகில் புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடக கலைஞர்களின் சார்பில் கலை நிகழ்ச்சி நடந்தது.தாசில்தார் நெகருன்னிசா தலைமை தாங்கி கலை நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். மண்டல துணை தாசில்தார் குபேந்திரன், தேர்தல் துணை தாசில்தார் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.இதில் வருவாய் ஆய்வாளர் ஏழுமலை, வி.ஏ.ஓ., காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE