திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுாரில் தமிழ்நாடு ஒய்வுபெற்ற அலுவலர் சங்க மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு சங்கதலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். சீனுவாசன் வரவேற்றார். வட்டாரத் தலைவர் அபூபக்கர் கடந்த மாத கூட்ட அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் ஆசிரியர்கள் பழனியாண்டி மற்றும் சரோஜா ஆகியோரின் மறைவுக்கு சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், மாநில சங்கம் தமிழக அரசுக்கு அறிவித்துள்ள ஓய்வூதியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்தும் விளக்கி பேசினார்.சங்க பொருளாளர் ஜவஹர் அலிகான் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE