உத்திரமேரூர் - உத்திரமேரூர், மல்லியங்கரணை பிரதான சாலையில், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லியங்கரணை கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையோரம், மின் கம்பங்களில் உள்ள மின் கம்பிகள் சிறுவர்களின் கைக்கு எட்டும் துாரத்தில் மிகவும் தாழ்வாக செல்கின்றன.இதனால், அறுவடை செய்த நெல் மூட்டைகள், வைக்கோல் ஆகியவற்றை கனரக வாகனங்களில் எடுத்துச் செல்லும் விவசாயிகள், ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர்.மேலும், ரேஷன் கடைக்கு, அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் டாரஸ் லாரி, எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் உராய்ந்தால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், தாழ்வாக செல்லும் மின் கம்பியை சீரமைக்க, மின் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE