ஸ்ரீபெரும்புதுார் - கிராமங்களில் உள்ள முக்கிய சாலை சத்திப்புகளில், வழிகாட்டி பெயர் பலகை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சுங்குவார்சத்திரம் அருகே, சோகாண்டி, காந்துார், மதுரமங்கலம் உள்ளிட்ட, பல ஊராட்சிகள் உள்ளன.இவற்றின் வழியே செல்லும் சாலைகளை பயன்படுத்தி, சுங்குவார்ச்திரம், திருவள்ளூர், பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும்.இந்த வழியே, தினமும், ஏராளமான வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.இந்நிலையில், மேற்கண்ட கிராமங்களில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில், வழிகாட்டி பலகை எதுவும் அமைக்கப்படவில்லை.இதனால், அந்த வழியே புதிதாக செல்வோர், எந்த சாலையில் செல்வது என தெரியாமல், குழம்பி வருகின்றனர். இந்த வழியை பயன்டுத்தாமல், நீண்ட துாரம் சுற்றி, நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்கின்றன.எனவே, கிராமங்களில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில், வழிகாட்டி பெயர் பலகை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE