வாலாஜாபாத் = சிறுவாக்கம் கிராமத்தில், குடியிருப்புகளுக்கு நடுவே இருக்கும், திறந்தவெளி குளத்திற்கு, தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.காஞ்சிபுரம் அடுத்த, சிறுவாக்கம் கிராமத்தில், அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் குடியிருப்புகளை ஒட்டி, பொதுக்குளம் உள்ளது.இக்குளம், பருவ மழை காலங்களில், நிரம்பும். சமீபத்தில் பெய்த, 'நிவர், புரெவி' புயல் மழையால், பொதுக்குளம் நிரம்பி, கடல் போல் காட்சி அளிக்கிறது.இதனால், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நடந்து வந்த குளம் சீரமைப்பு பணி, அரைகுறையாக நிறுத்தப்பட்டு உள்ளது.மேலும், குளத்திற்கு தடுப்பு வேலி இல்லாததால், அதன் அருகே செல்லும் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள், தவறி விழும் அபாயம் உள்ளது.எனவே, சிறுவாக்கம் பொதுக்குளத்தை சுற்றி, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், இரும்பால் ஆன தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE