காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில், கார்த்திகை அமாவாசை முன்னிட்டு, கச்சபேஸ்வரர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் குவிந்து, நாக தேவதை வழிபாடு செய்தனர்.காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில், அரச மரத்தின் கீழ், நுாற்றுக்கணக்கான நாகலிங்கம் சிலைகள் உள்ளன.கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, நேற்று, இங்குள்ள நாக சிலைகளுக்கு, பாலாபிஷேகம் செய்து, பக்தர்கள் வழிபட்டனர்.இவ்வாறு வழிபட்டால், திருமண தடை, குழந்தைப்பேறு, நாக தோஷம் போன்றவை நீங்கும் என்பது ஐதீகம்.இதற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து, கச்சபேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வந்து, நாக லிங்கங்களை வழிபாடு செய்தனர்.காலையில் இருந்து மாலை வரை, ஏராளமான பக்தர்கள் குவிந்து, 108 முறை அரச மரத்தை சுற்றி வந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE