திண்டுக்கல் : 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி திண்டுக்கல்லில் பா.ம.க., வினர் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க.,வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்வலமாக சென்று மனு அளிக்கும் போராட்டம் நடந்தது.திண்டுக்கல் கிழக்கு ஒன்றிய பா.ம.க.,வினர் செயலாளர் கோபால், கிளைச் செயலாளர் செல்வகுமார் தலைமையில் பெரிய கோட்டை ஊராட்சி வி.ஏ.ஓ., அலுவலகம் முன் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி மனு அளித்தனர். நிர்வாகிகள் நாகமுத்து, ஈஸ்வரன் பங்கேற்றனர்.
பழநியில் பா.ம.க., சார்பில் மனு அளிக்கும் போராட்டத்தில்மாவட்ட செயலாளர் வைரமுத்து, துணை அமைப்பு செயலாளர் அலிபாபா, மகளிர் அணி துணைச்செயலாளர் ராணி உட்பட பலர் பங்கேற்றனர்.
நிலக்கோட்டை:
மாவட்ட தலைவர் மணி, ஒன்றிய செயலாளர் விஜயகுமார், இளைஞரணி துணை செயலாளர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE