திண்டுக்கல் : திண்டுக்கல்லில் விவசாயிகளுக்காக காத்திருந்த பா.ஜ.,வினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறாததைக் கண்டித்து, நாடு முழுவதும் பா.ஜ., அலுவலகத்தை முற்றுகையிட போவதாக விவசாயிகள் அறிவித்தனர். இதையடுத்து நேற்று திண்டுக்கல் பா.ஜ., அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் துணை தலைவர்கள் தண்டபாணி, மல்லிகா, செயலாளர்கள் கார்த்திக் வினோத், பாலமுருகன் உட்பட கட்சியினர் காத்திருந்தனர். ஆனால், அலுவலகத்தை முற்றுகையிட யாரும் வராததால், கலைந்து சென்றனர்.
தலைவர் தனபாலன் கூறுகையில், 'விவசாயிகள் வந்திருந்தால் வேளாண் சட்டத்தின் நன்மைகள் குறித்து விளக்கி இருப்போம். விவசாயிகள் போர்வையில் கட்சியினர் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையான விவசாயிகள் யாரும் வேளாண் சட்டத்தை எதிர்க்கவில்லை' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE