சென்னை; பூம்புகார் நிறுவனத்தின் சார்பில், கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, பரிசுப் பொருட்கள் விற்பனை சிறப்பு கண்காட்சி துவங்கிஉள்ளது.தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகம் எனும் பூம்புகார் நிறுவனம், கைவினைஞர்களின் உற்பத்தியை சந்தைப்படுத்தி, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்தில், செயல்பட்டு வருகிறது.அதற்காக நாடு முழுதும் விற்பனை கண்காட்சிகளை, தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் படி, கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில், பரிசுப் பொருட்கள் சிறப்பு கண்காட்சியை துவக்கியுள்ளது.கண்காட்சியில், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, கைவினை, பரிசுப் பொருட்கள், ஆந்திர மாநிலம் கொண்டப்பள்ளி, சென்னப்பட்டினா, எட்டிக்குப்பா மரபொம்மைகள், பிற மாநில பரிசு பொருட்கள் இடம் பெற்றுள்ளன.மேலும், கலைப் பொருட்கள், சந்தனமரப் பொருட்கள், வெண்மரப் பொருட்கள், பித்தளை விளக்குகள், பஞ்சலோக சிலைகள், பழங்குடி கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும், 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.ஜன., 2ம் தேதி வரை நடத்தப்படும் இக்கண்காட்சிக்கு, தினமும் காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணிவரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE