இடுக்கி : கேரளா செருதோணி அருகே வாழத்தோப்பு என்ற பகுதியில் எரிசாராயத்தில் கலர் பொடி கலந்து போலி மதுவிற்ற தாமஸ் பிரான்சிஸ் 58, ரோய் 54, ஆகியோரை எக்சைஸ் போலீசார் கைது செய்தனர்.
வாழத்தோப்பில் நீண்ட காலமாக போலிமது விற்பனை நடப்பதாக இடுக்கி எக்சைஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தபோது இருவரும் சிக்கினர்.தாமஸ்பிரான்சிஸ் மொத்தமாக எரிசாராயம் வாங்கி வந்து அதில் மது போல கலர் பொடி கலந்து ரோயிடம் கொடுத்து விற்பனை நடத்தி வந்துள்ளார். அவர்களிடம் இருந்து கலர் பொடி கலந்த 20 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
அதேபோல் உடும்பன்சோலை அருகே பாலன்பிள்ளைசிட்டி பகுதியில் எக்சைஸ் போலீசார் நடத்திய சோதனையில் ரமேஷ் கே. கருணாகரனுக்குச் சொந்தமான இடத்தில்200 லிட்டர் சாராய ஊறலை கண்டு பிடித்து அளித்தனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.-----
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE