பெரியகுளம் : பெரியகுளம் பூலான்குளம் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழவடகரை பகுதியில் அமைந்துள்ளது பூலான்குளம். 60 ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாய்க்கு கும்பக்கரை அருவி மற்றும்பூலான்குளம் நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் நீர் வரும். இக்கண்மாய் நீரை நம்பி நுாறு ஏக்கரில் நெல், வாழை கரும்பு பயிர் செய்யப்படும்.
இந்தக்கண்மாயில் ஆக்கிரமிப்பு செய்து சிலர் மாந்தோப்புகளாக மாற்றி வருகின்றனர்.இதனால் நீர்தேக்க பரப்பளவு குறைந்து வருகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE