திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்திலுள்ள லட்சுமி தீர்த்த குளம் நிரம்புவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தண்ணீரிலுள்ள பாசிகள் அகற்றப்பட்டு வருகின்றன.மலை அடிவாரத்தில் உள்ள இக்குளம் பாறைகளிலிருந்து வழிந்துவரும் மழைநீரால் மட்டுமே நிரம்பும்.கோயிலுக்கு வரும் பக்தர்கள் இக்குளத்தின் தண்ணீரை தலையில் தெளித்து செல்வர். இக்குளத்திலிருந்த மீன்களுக்கு உப்பு, மிளகு, பொரி போட்டால் மனிதர்களின் தோல் வியாதிகள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.பல மாதங்களாக வறண்டு கிடந்த இக்குளம் மழையால் நிரம்புகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE