மேலுார் : மேலுார் முத்தமிழ் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனு கொடுத்தும் அடிப்படை வசதி செய்து தராமல் நகராட்சி மெத்தனமாக உள்ளது.
இந்நகரில் ஆயிரத்திற்கும்மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் 3வது தெருவில் அடிப்படை வசதிகள் இல்லை. பழைய இரும்பு கடை கழிவுகளை ரோடு முழுவதும் குவித்து வைத்துள்ளதால் எலிகளும், அவற்றை பிடிக்க பாம்புகளும் படையெடுப்பதால் மக்கள் பயத்துடன் வாழ்கின்றனர்.சங்க செயலாளர் மனமூர்த்தி:- ரோட்டில் பழைய பொருட்கள் குவிந்துள்ள தால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார கேடு ஏற்படுகிறது.
மழைநீர், கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. சங்கம் சார்பில் நகராட்சியில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. வரி வாங்கும் நகராட்சி நிர்வாகம் வசதி செய்து தர மறுக்கிறது என்றார்.நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ''ரோட்டை ஆக்கிரமித்துள்ள கழிவு பொருட்கள் அகற்றப்படும்'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE