சேலம்: சேலம் மாவட்டத்தில், புதிதாக, 58 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சேலம், அரசு மருத்துவமனை, கொரோனா வார்டில், அனுமதிக்கப்பட்டவர்களில், ஒரு பெண், ஆண்கள் மூவர் குணமாகி, நேற்று வீடு திரும்பினர். புதிதாக, சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில், 58 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில், 20, பெத்தநாயக்கன்பாளையத்தில் ஆறு பேர், கொளத்தூரில் நால்வர், மேட்டூர், கெங்கவல்லியில் தலா மூவர், இடைப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, வீரபாண்டி, ஆத்தூர், பி.என்.பட்டியில் தலா இருவர். காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம், ஆத்தூர், நரசிங்கபுரத்தில் தலா ஒருவர் வீதம், மாவட்டத்தில், 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர நாமக்கல்லை சேர்ந்த மூவர், ஈரோட்டை சேர்ந்த இருவர் என, சேலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 58 பேர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE