மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி வட்டாரத்தில், கலை நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நடந்தது. இடங்கணசாலையில் நடந்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, மகுடஞ்சாவடி உதவி வேளாண் இயக்குனர் மணிமேகலாதேவி தலைமை வகித்து, வேளாண் திட்டங்கள் குறித்து விளக்கினார். பின் ஆடல்பாடல், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், கலைஞர்கள் அட்மா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் விவசாயிகள் பயிற்சி, கண்டுணர்வு சுற்றுலா, செயல்விளக்கங்கள், பண்ணை பள்ளி, சொட்டு நீர் பாசனத்தின் முக்கியத்துவம், மண், நீர் பரிசோதனை செய்வதின் முக்கியத்துவம் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE