சேலம்: பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம், பெரியபுதூர், முருகன் நகர் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி, நேற்று மாற்றுத்திறனாளிகள் பலர், சக்கர நாற்காலிகளுடன், அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் எதிரில், சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநகராட்சி அலுவலர்கள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது: முருகன் நகர் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான பொது வழிபாதையை, சிலர் ஆக்கிரமித்து கேட் அமைத்து, கார் ?ஷட்டாக மாற்றியுள்ளனர். பல முறை, ஆதாரங்களுடன் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், அப்பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான, இலவச மருத்துவ மையம் அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என, அதிகாரிகள் கூறியதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE