சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி அருகே, மின்சாரம் தாக்கி பெண் பலியானார். சேலம், கொண்டலாம்பட்டி அருகே, பி.நாட்டாமங்கலத்தை சேர்ந்த குணசேகரன் மனைவி கவிதா, 38. இவர், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வீட்டில் குளிப்பதற்கு, ஹீட்டரை போட்டுள்ளார். பைப்பில் இருந்து தண்ணீர் வந்து வாளி, நிரம்பிய நிலையில், அதில் கையை வைத்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு போராடிய அவரை, உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE