தர்மபுரி: மத்திய அரசின், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை வாபஸ் பெறக்கோரியும், டில்லியில் போராட்டம் நடத்தி வரும், விவசாயிகளுக்கு ஆதரவாக, அகில இந்திய போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர், தர்மபுரி அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் டில்லிபாபு தலைமை வகித்தார். இதில், விவசாயிகள் மீது, தாக்குதல் நடத்திய, மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும், மின் மசோதா, 2020யை சட்டமாக்கக் கூடாது என கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில், அருச்சுணன், மல்லையன், கோவிந்தராஜ், தங்கராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட, 20 பெண்கள் உள்பட, 80 பேரை டவுன் போலீசார் கைது செய்தனர். இதேபோல், கிருஷ்ணகிரியிலும், விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE