மொரப்பூர்: மொரப்பூரில், தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயில் மோதி மூதாட்டி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மொரப்பூர் அடுத்த எம்.வேட்ரப்பட்டியை சேர்ந்தவர் மூக்கியம்மாள், 65; இவர், நேற்று காலை, 11:30 மணிக்கு, மொரப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக, அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, டில்லியிலிருந்து கேரளா சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில், படுகாயமடைந்த மூக்கியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து, மொரப்பூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE