அரூர்: அரூர் அருகே, பாலத்தின் கீழே, வாலிபர் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் விஜி, 26, லாரி டிரைவர்; இவருக்கு, சூர்யா என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், விஜியின் மனைவி, மூன்று குழந்தைகளுடன், வேறு ஒரு நபருடன் சென்று விட்டார். இதனால், மன அழுத்தத்தில் இருந்து வந்த விஜி, மது பழக்கத்துக்கு அடிமையானார். நேற்று முன்தினம், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கட்டரசம்பட்டியில் உள்ள அக்கா ஜெயலட்சுமி வீட்டிற்கு, விஜி வந்துள்ளார். நேற்று காலை, 7:00 மணிக்கு, பொய்யப்பட்டியில் இருந்து கட்டரசம்பட்டி செல்லும் சாலையிலுள்ள பாலத்தின் அடியில், விஜி இறந்து கிடந்தார். அவர், பாலத்தில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என, கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE