ஓசூர்: கெலமங்கலம் ஒன்றியம், குந்துமாரனப்பள்ளி ஏரி மற்றும் பொம்மதாதனூர் பஞ்., உட்பட்ட கோட்டட்டி ஏரி ஆகியவற்றை தூர்வாரி சுத்தம் செய்ய, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்று, கெலமங்கலம் ஒன்றிய நிர்வாகம் மூலம், மாநில நிதிக்குழு திட்டத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், குந்துமாரனப்பள்ளி ஏரியையும், 8 லட்சம் ரூபாய் மதிப்பில், கோட்டட்டி ஏரியையும் தூர்வார நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணிகளை, கெலமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி துவக்கி வைத்தார். கெலமங்கலம், பி.டி.ஓ., ஹேமலதா, இ.கம்யூ., ஒன்றிய செயலாளர் ஜெயராமன், பஞ்., தலைவர்கள் முரளி, கிருஷ்ணப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE